யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

கோவையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்தார். யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.





இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



மலிவு விலை மருந்துகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், மார்கெட் விலையை விட குறைவான விலைக்கு மருந்துகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் இது பயனுள்ள திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் PM-SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்புதல் குறித்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை அனைத்து மக்களின் கருத்துகளையும் கேட்டு உருவாக்கப்பட்டதாகவும், ஆரம்பக் கல்வியில் தாய்மொழி கல்வியை வலியுறுத்துவதே இதன் நோக்கம் என்றும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்துவோம் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் குறித்து பேசிய அமைச்சர், "மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் செய்தியாளர்களாக இருக்கின்றார்கள். யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம், எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. இதனை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர இருக்கிறது" என்றார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அமைச்சர், தேசத்திற்கு எதிராக செயல்பட்ட 69 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர், விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும், ஊடகங்களே இதனை பெரிதுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...