கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

கோவையில் செப்டம்பர் 9 அன்று விநаயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 9ஆம் தேதி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியின் போது நிறுவப்பட்ட சிலைகள், அடுத்த இரண்டு நாட்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதன்படி, செப்டம்பர் 9 அன்று மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படும். மேலும், மதியம் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து தொடங்கும் மற்றொரு ஊர்வலம் குறிச்சி குளத்தில் முடிவடையும்.

போக்குவரத்து மாற்றங்கள்:

1. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக மாற்று வழியில் செல்ல வேண்டும்.

3. உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும்.

4. உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.

5. பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்களுக்கும் மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொண்டு பயணிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...