கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

கோவையில் செப்டம்பர் 9 அன்று விநаயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 9ஆம் தேதி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியின் போது நிறுவப்பட்ட சிலைகள், அடுத்த இரண்டு நாட்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதன்படி, செப்டம்பர் 9 அன்று மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படும். மேலும், மதியம் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து தொடங்கும் மற்றொரு ஊர்வலம் குறிச்சி குளத்தில் முடிவடையும்.

போக்குவரத்து மாற்றங்கள்:

1. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக மாற்று வழியில் செல்ல வேண்டும்.

3. உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும்.

4. உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.

5. பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்களுக்கும் மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொண்டு பயணிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...