கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

கோவையில் செப்டம்பர் 9 அன்று விநаயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 9ஆம் தேதி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியின் போது நிறுவப்பட்ட சிலைகள், அடுத்த இரண்டு நாட்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதன்படி, செப்டம்பர் 9 அன்று மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படும். மேலும், மதியம் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து தொடங்கும் மற்றொரு ஊர்வலம் குறிச்சி குளத்தில் முடிவடையும்.

போக்குவரத்து மாற்றங்கள்:

1. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக மாற்று வழியில் செல்ல வேண்டும்.

3. உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும்.

4. உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.

5. பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்களுக்கும் மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொண்டு பயணிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...