கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

கோவை பீளமேடு அருகே போலீசார் வாகன சோதனையின் போது 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.


கோவை: கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் செப்டம்பர் 6 அன்று பீளமேடு, காந்தி மாநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 458 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த குட்கா கடத்தலில் ஈடுபட்ட வி.கே. ரோடு, ஏ.டி. காலனியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 34) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து செயல்பட்ட முகேஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார்.

கைதான நபர்களிடமிருந்து ஒரு வேன், ஒரு மோபெட் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...