கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

கோவை பீளமேடு அருகே போலீசார் வாகன சோதனையின் போது 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.


கோவை: கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் செப்டம்பர் 6 அன்று பீளமேடு, காந்தி மாநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 458 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த குட்கா கடத்தலில் ஈடுபட்ட வி.கே. ரோடு, ஏ.டி. காலனியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 34) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து செயல்பட்ட முகேஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார்.

கைதான நபர்களிடமிருந்து ஒரு வேன், ஒரு மோபெட் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...