தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்: தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை வரவேற்று மகிழ்ச்சி

தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.


திருப்பூர்: தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, தாராபுரத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பாக ஒன்று கூடினர்.



மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் ஷேக் பரீத் மற்றும் மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோர் தலைமையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...