தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்: தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை வரவேற்று மகிழ்ச்சி

தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.


திருப்பூர்: தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, தாராபுரத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பாக ஒன்று கூடினர்.



மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் ஷேக் பரீத் மற்றும் மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோர் தலைமையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...