கோவை செட்டி வீதி அருகே இளைஞர் துரத்தி வெட்டிக் கொலை

கோவை செட்டி வீதி அருகே, மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கெம்பட்டி காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கோகுல் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாலாஜி அவென்யூ பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் அரிவாள் மற்றும் கட்டை பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை செட்டி வீதி அருகே இளைஞர் ஒருவர் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல் (24) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

பாலாஜி அவென்யூ பகுதியில் கோகுலை எதிர்தரப்பு இளைஞர்கள் துரத்தியதாகவும், பின்னர் அரிவாளால் வெட்டியும் கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக காயமடைந்த நிலையில், ரத்தம் வடிந்தபடி ஓடி ஒளிந்த கோகுல் உயிரிழந்துள்ளார். சாலையில் தெரிந்த ரத்தத்தைப் பின்தொடர்ந்து சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகுலின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...