கோவை யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் விமான உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன் கண்காட்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் விமான உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. 5000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் விமான உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் இன்ஜினீரியர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். கோவை CRPF கமாண்டர் ஆண்டனி பென்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

தனது உரையில் ஆண்டனி பென்சன், மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார். யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சி.ஏ.எம். கைலாஷ் குமார் மற்றும் செயலாளர் வி. அருண் கார்த்திகேயன் ஆகியோர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர்.



கண்காட்சியின் சிறப்பம்சமாக விமானங்களின் மாதிரிகள், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வாகனங்களின் அணிவகுப்பு, ரேடியோ கட்டுப்பாட்டில் இயங்கும் சிறிய ரக விமானங்களின் மாதிரிகள் மற்றும் ட்ரோன்களின் செயல்பாடு, விமானங்களின் செயல்முறை விளக்கம், மாதிரிகளை இயக்கும் வாய்ப்பு, ஆளில்லா விமானங்களை செயல்படுத்தும் விமானிகளுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு ஆகியவை இடம்பெற்றன.



இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியை 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 4000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...