போதைப் பொருள் விற்பனை: ஹரியானாவில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கோவைக்கு கொண்டு வரப்பட்டார்

கோவையில் போதைப் பொருள் விற்பனை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டு, கோவைக்கு கொண்டு வரப்பட்டார். 20,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்து வந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் அரியானா மாநிலத்தில் வைத்து கைது செய்தனர். இவரிடம் இருந்து 20 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஜூலை மாதம் கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்த துணை நடிகைகள் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். விசாரணையில், அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் கார்க் (43) என்பவரிடம் இருந்து மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதும், விற்றதும் தெரிய வந்தது.

மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் தனிப்படை போலீசார் அரியானாவில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் விளைவாக, ஹரியானாவில் சச்சினை பிடித்து கைது செய்தனர். அங்குள்ள நீதிமன்றத்தில் சச்சினை ஆஜர்படுத்தி, கோவைக்கு நேற்று (செப்டம்பர் 6) அழைத்து வந்தனர். பின்னர், விசாரணையைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் சச்சினை அடைத்தனர்.

மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "சச்சின் வலி நிவாரண மாத்திரைகளை பரிந்துரைச்சீட்டு இல்லாமல், போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்துள்ளார். இவரிடம் இருந்து 20 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர், மாத்திரைகளை கூரியர் மூலம் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வந்துள்ளார். 100 மாத்திரை கொண்ட அட்டையை ரூ.600க்கு வாங்கி அதை ரூ.3 ஆயிரத்து விற்றுள்ளார். இவரிடம் வாங்குபவர்கள் அதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்கின்றனர்," என்றார்.

மேலும் அவர், "போதை மாத்திரை புழக்கத்தை ஒழிக்க போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கஞ்சா, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 158 கிலோ கஞ்சா, 2,598 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இதுவரை 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 39 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...