கோவை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டம்

கோவை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்து அமைப்புகள் சார்பாக மகாராஜா விநாயகர், சிங்க விநாயகர், அன்னபறவை விநாயகர், மாப்பிள்ளை விநாயகர், மயில் விநாயகர், நீர் வீழ்ச்சி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் ஒரு பகுதியாக, கோவையின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ரங்கம்மாள் காலனி, வெள்ளகிணர், உருமாண்டம்பாளையம், தடாகம், கணுவாய், பன்னிமடை, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக விழா கொண்டாடப்பட்டது.



நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் ராஜஸ்தானி அரண்மனை போன்ற அலங்கார அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வாராகி மணிகண்ட சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, தக்காளி சாதம், புளி சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டன. ஹிந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, பாரத் சேனா, விவேகானந்தர் இளைஞர் பேரவை, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்த கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...