மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடுகள் தீவிரம்

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. பவானி ஆற்றில் சிலைகள் கரைக்க ஏதுவாக சகதிகள் அகற்றப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் அருகே பவானி ஆற்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



தற்போது அந்த இடம் சகதியாக இருப்பதால், பாதுகாப்பு கருதியும் எளிதில் சிலைகளை கரைக்க ஏதுவாகவும் சகதிகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மூலம் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது.

சி டி சி டெப்போ முதல் சுப்பிரமணியர் கோவில் வரை சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க நகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஏற்பாடுகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...