உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு. ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் போட்டு கொண்டாடினர். 60 வயது முதியவர் விஜய் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள லதாங்கி அனுஷம் திரையரங்கில் நடிகர் விஜயின் 'கோட்' திரைப்படம் இன்று வெளியானது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தினர் திரையரங்கம் முன்பு பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் போட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

திரையரங்கில் விஜய் முதன்முதலாக தோன்றும் போதும், பாடல் காட்சிகளின் போதும், சண்டை காட்சிகளின் போதும் ரசிகர்கள் தங்களை மறந்து திரையின் முன்பு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, 'கோட்' திரைப்படத்தில் விஜய் தோன்றும் முதல் பாடலுக்கு 60 வயது முதியவர் ஒருவர் அசத்தலாக நடனமாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.



திரைப்படம் பார்த்து முடித்து வெளியே வந்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கையில், "விஜய் நடித்த 68 படங்களில் இந்தப் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும், எதிர்பாராத திருப்பங்களும் மெய்சிலிர்க்க வைத்தன," என்றனர்.

மேலும், "அஜித் ரசிகர்கள் கூட விஜய்யின் இந்தத் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளதாகக் கூறுகின்றனர். யாரும் எதிர்பார்க்காத நடிப்பு திறமையை 'கோட்' படத்தில் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்," என்று ரசிகர்கள் பாராட்டினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...