உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு. ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் போட்டு கொண்டாடினர். 60 வயது முதியவர் விஜய் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள லதாங்கி அனுஷம் திரையரங்கில் நடிகர் விஜயின் 'கோட்' திரைப்படம் இன்று வெளியானது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தினர் திரையரங்கம் முன்பு பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் போட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

திரையரங்கில் விஜய் முதன்முதலாக தோன்றும் போதும், பாடல் காட்சிகளின் போதும், சண்டை காட்சிகளின் போதும் ரசிகர்கள் தங்களை மறந்து திரையின் முன்பு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, 'கோட்' திரைப்படத்தில் விஜய் தோன்றும் முதல் பாடலுக்கு 60 வயது முதியவர் ஒருவர் அசத்தலாக நடனமாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.



திரைப்படம் பார்த்து முடித்து வெளியே வந்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கையில், "விஜய் நடித்த 68 படங்களில் இந்தப் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும், எதிர்பாராத திருப்பங்களும் மெய்சிலிர்க்க வைத்தன," என்றனர்.

மேலும், "அஜித் ரசிகர்கள் கூட விஜய்யின் இந்தத் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளதாகக் கூறுகின்றனர். யாரும் எதிர்பார்க்காத நடிப்பு திறமையை 'கோட்' படத்தில் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்," என்று ரசிகர்கள் பாராட்டினர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...