உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு. ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் போட்டு கொண்டாடினர். 60 வயது முதியவர் விஜய் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள லதாங்கி அனுஷம் திரையரங்கில் நடிகர் விஜயின் 'கோட்' திரைப்படம் இன்று வெளியானது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தினர் திரையரங்கம் முன்பு பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் போட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

திரையரங்கில் விஜய் முதன்முதலாக தோன்றும் போதும், பாடல் காட்சிகளின் போதும், சண்டை காட்சிகளின் போதும் ரசிகர்கள் தங்களை மறந்து திரையின் முன்பு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, 'கோட்' திரைப்படத்தில் விஜய் தோன்றும் முதல் பாடலுக்கு 60 வயது முதியவர் ஒருவர் அசத்தலாக நடனமாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.



திரைப்படம் பார்த்து முடித்து வெளியே வந்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கையில், "விஜய் நடித்த 68 படங்களில் இந்தப் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும், எதிர்பாராத திருப்பங்களும் மெய்சிலிர்க்க வைத்தன," என்றனர்.

மேலும், "அஜித் ரசிகர்கள் கூட விஜய்யின் இந்தத் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளதாகக் கூறுகின்றனர். யாரும் எதிர்பார்க்காத நடிப்பு திறமையை 'கோட்' படத்தில் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்," என்று ரசிகர்கள் பாராட்டினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...