உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு. ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் போட்டு கொண்டாடினர். 60 வயது முதியவர் விஜய் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள லதாங்கி அனுஷம் திரையரங்கில் நடிகர் விஜயின் 'கோட்' திரைப்படம் இன்று வெளியானது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தினர் திரையரங்கம் முன்பு பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் போட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

திரையரங்கில் விஜய் முதன்முதலாக தோன்றும் போதும், பாடல் காட்சிகளின் போதும், சண்டை காட்சிகளின் போதும் ரசிகர்கள் தங்களை மறந்து திரையின் முன்பு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, 'கோட்' திரைப்படத்தில் விஜய் தோன்றும் முதல் பாடலுக்கு 60 வயது முதியவர் ஒருவர் அசத்தலாக நடனமாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.



திரைப்படம் பார்த்து முடித்து வெளியே வந்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கையில், "விஜய் நடித்த 68 படங்களில் இந்தப் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும், எதிர்பாராத திருப்பங்களும் மெய்சிலிர்க்க வைத்தன," என்றனர்.

மேலும், "அஜித் ரசிகர்கள் கூட விஜய்யின் இந்தத் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளதாகக் கூறுகின்றனர். யாரும் எதிர்பார்க்காத நடிப்பு திறமையை 'கோட்' படத்தில் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்," என்று ரசிகர்கள் பாராட்டினர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...