கோவை: மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் கைது - ஆசிரியர் தினத்தில் போக்சோ வழக்கு பதிவு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆசிரியர் தினத்தன்று நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் "நம்ம ஊரு நம்ம பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் பிராக்டிகல் வகுப்பு எடுப்பதற்காக காரமடை அருகிலுள்ள கண்ணார்பாளையத்தைச் சேர்ந்த 39 வயதான அய்யாசாமி என்பவர் வந்திருந்தார். அவர் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரிடம் எப்போது தங்கள் வகுப்பிற்கு பாடம் எடுக்க வருவார் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அய்யாசாமி, "இரவு 11 மணிக்கு வருகிறேன், பாய் எடுத்து வை" என்று தகாத முறையில் பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் இந்திராணி சோபியா தலைமையிலான போலீசார் ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் உண்மை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, அய்யாசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...