கோவை: மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் கைது - ஆசிரியர் தினத்தில் போக்சோ வழக்கு பதிவு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆசிரியர் தினத்தன்று நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் "நம்ம ஊரு நம்ம பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் பிராக்டிகல் வகுப்பு எடுப்பதற்காக காரமடை அருகிலுள்ள கண்ணார்பாளையத்தைச் சேர்ந்த 39 வயதான அய்யாசாமி என்பவர் வந்திருந்தார். அவர் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரிடம் எப்போது தங்கள் வகுப்பிற்கு பாடம் எடுக்க வருவார் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அய்யாசாமி, "இரவு 11 மணிக்கு வருகிறேன், பாய் எடுத்து வை" என்று தகாத முறையில் பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் இந்திராணி சோபியா தலைமையிலான போலீசார் ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் உண்மை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, அய்யாசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...