கோவை CCMA அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தின விழா: மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

கோவை CCMA அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை ராஜவீதி பகுதியில் அமைந்திருக்கும் கோவை துணி வணிகர் சங்க (CCMA) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் எலைட் சார்பில் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் எலைடின் தலைவர் மணிகண்டன் மற்றும் செயலாளர் செந்தில் வேலன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு ஜூனியர் ரெட் கிராஸ், தமிழ்நாடு சாரணர் படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவியர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன், தற்போதும் தனது பையில் தன் ஆசிரியரின் புகைப்படத்தை வைத்திருப்பதாகவும், தானும் ஒரு ஆசிரியர் என்றும் தெரிவித்தார். ஆசிரியர்கள் நம் வாழ்வின் ஆணிவேர் என்பதை உணர்ந்து அவர்களை நினைவு கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தனது ஆசிரியரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஆணையாளர், தன் வெற்றியில் அவரது ஆசிரியர் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தொடர்ந்து, 2023-24 கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெறவிருக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பரதநாட்டியம், நாடகம், பாடல் உள்ளிட்ட மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...