கோவை CCMA அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தின விழா: மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

கோவை CCMA அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை ராஜவீதி பகுதியில் அமைந்திருக்கும் கோவை துணி வணிகர் சங்க (CCMA) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் எலைட் சார்பில் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் எலைடின் தலைவர் மணிகண்டன் மற்றும் செயலாளர் செந்தில் வேலன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு ஜூனியர் ரெட் கிராஸ், தமிழ்நாடு சாரணர் படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவியர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன், தற்போதும் தனது பையில் தன் ஆசிரியரின் புகைப்படத்தை வைத்திருப்பதாகவும், தானும் ஒரு ஆசிரியர் என்றும் தெரிவித்தார். ஆசிரியர்கள் நம் வாழ்வின் ஆணிவேர் என்பதை உணர்ந்து அவர்களை நினைவு கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தனது ஆசிரியரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஆணையாளர், தன் வெற்றியில் அவரது ஆசிரியர் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தொடர்ந்து, 2023-24 கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெறவிருக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பரதநாட்டியம், நாடகம், பாடல் உள்ளிட்ட மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...