கேரள ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து; மாற்றுப் பாதையில் இயக்கம்

சேலம் ரயில் கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 6 அன்று பல ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சில நிலையங்களை தவிர்த்து இயக்கப்படும்.


Coimbatore: சேலம் ரயில் கோட்டத்துக்கு உள்பட்ட பல இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலக்காடு - கோவை மெமு ரயில் (எண்: 06806) செப்டம்பர் 6-ஆம் தேதி பாலக்காடு - போத்தனூர் இடையே மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும்.

கோவை - ஷொரணூர் மெமு ரயில் (எண்: 06805) கோவை - போத்தனூர் இடையே செப்டம்பர் 6-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் போத்தனூர் - ஷொரணூர் இடையே மட்டும் இயக்கப்படும்.

ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352) மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகியவை செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும். போத்தனூர் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.

ஈரோடு - பாலக்காடு மெமு ரயில் (எண்: 06819) செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயில் சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...