கேரள ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து; மாற்றுப் பாதையில் இயக்கம்

சேலம் ரயில் கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 6 அன்று பல ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சில நிலையங்களை தவிர்த்து இயக்கப்படும்.


Coimbatore: சேலம் ரயில் கோட்டத்துக்கு உள்பட்ட பல இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலக்காடு - கோவை மெமு ரயில் (எண்: 06806) செப்டம்பர் 6-ஆம் தேதி பாலக்காடு - போத்தனூர் இடையே மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும்.

கோவை - ஷொரணூர் மெமு ரயில் (எண்: 06805) கோவை - போத்தனூர் இடையே செப்டம்பர் 6-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் போத்தனூர் - ஷொரணூர் இடையே மட்டும் இயக்கப்படும்.

ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352) மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகியவை செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும். போத்தனூர் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.

ஈரோடு - பாலக்காடு மெமு ரயில் (எண்: 06819) செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயில் சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...