கேரள ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து; மாற்றுப் பாதையில் இயக்கம்

சேலம் ரயில் கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 6 அன்று பல ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சில நிலையங்களை தவிர்த்து இயக்கப்படும்.


Coimbatore: சேலம் ரயில் கோட்டத்துக்கு உள்பட்ட பல இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலக்காடு - கோவை மெமு ரயில் (எண்: 06806) செப்டம்பர் 6-ஆம் தேதி பாலக்காடு - போத்தனூர் இடையே மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும்.

கோவை - ஷொரணூர் மெமு ரயில் (எண்: 06805) கோவை - போத்தனூர் இடையே செப்டம்பர் 6-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் போத்தனூர் - ஷொரணூர் இடையே மட்டும் இயக்கப்படும்.

ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352) மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகியவை செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும். போத்தனூர் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.

ஈரோடு - பாலக்காடு மெமு ரயில் (எண்: 06819) செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயில் சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...