கோவை கொடிசியாவில் 'ராமேட் இந்தியா 2024' பேப்பர் மற்றும் பேக்கேஜிங் கண்காட்சி: செப்டம்பர் 10 முதல் 12 வரை

கோவை கொடிசியாவில் செப்டம்பர் 10 முதல் 12 வரை நடைபெறும் 'ராமேட் இந்தியா 2024' கண்காட்சியில் பேப்பர் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும். 150 கோடி ரூபாய் வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற செப்டம்பர் 10 முதல் 12 வரை "3P Expo"வின் ராமேட் இந்தியா 2024 கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான இந்த கண்காட்சியில், பேப்பர் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான காட்சிப்படுத்தல்கள் இடம்பெறும்.

இந்த கண்காட்சியின் போஸ்டர் வெளியீட்டு விழா கோவை கொடிசியா அரங்கில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்றது. இதில் "3P Expo" தலைவர் ஜெகதீசன், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் சிறப்பம்சங்களாக, லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் துறை சார்ந்த அரங்குகள், 55 காட்சி அரங்குகள், 20க்கும் மேற்பட்ட நேரடி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு ஆகியவை இடம்பெறும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கண்காட்சியின் மூலம் 150 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கோவா, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். பார்வையாளர்கள் அனைவருக்கும் நுழைவு இலவசம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...