உடுமலையில் விநாயகர் சிலை விற்பனை மந்தம்: தொழிலாளர்கள் கவலை

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன்னதாக, விநாயகர் சிலை விற்பனை மந்தமாக உள்ளது. கடந்த ஆண்டை விட விற்பனை குறைவாக இருப்பதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வரும் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாக்பவுடர், தேங்காய் மஞ்சி கொண்டு அச்சில் வார்த்து சிலைகளை வடிவமைத்து வர்ணம் பூசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.

வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்களைக் கவரும் அழகில் மனதை ஈர்க்கின்றன. ரூ.100 முதல் ரூ.10,000 வரையில் உயரத்திற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, உடுமலை பகுதியில் உள்ள சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.



ஆனால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை குறைவாக உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விற்பனை அதிகரித்து தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...