வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் பேருந்து-இருசக்கர வாகனம் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து. ஒருவர் காயம். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதியில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஒருவர் காலில் படுகாயம் அடைந்தார்.



பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த அரசு பேருந்தும், கேரளா மாநிலம் பெருந்தல்மண்ணு பகுதியில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த இருசக்கர வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்து காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காடம்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது:

- வால்பாறை மலைப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

- மலைப்பகுதியில் மேலே வரும் வாகனத்திற்கு கீழே செல்லும் வாகனங்கள் வழிவிட்டு செல்ல வேண்டும்.

- மழை பெய்து வருவதால் இருசக்கர வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

- கவர்கள், ஊமையாண்டி முடக்கு போன்ற பகுதிகளில் அதிக மேகமூட்டம் இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாது. எனவே, வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக வர வேண்டும்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...