கோவை மாநகராட்சி ஆணையாளர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் மத்திய மண்டலத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால், சமுதாய நலக்கூடம், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.





இந்த ஆய்வின்போது, வார்டு எண் 47க்குட்பட்ட சங்கனூர் பிரதான சாலை பகுதி, நால்வர் லே-அவுட் பகுதி மற்றும் இரத்தினபுரி, பி.எம்.சாமி காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகளை ஆணையாளர் பார்வையிட்டார்.



மேலும், காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தினை ஆய்வு செய்து, அதனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 47க்குட்பட்ட செல்வகுமாரசாமி கார்டன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சிறுவர் விளையாட்டு பூங்காவை பார்வையிட்ட ஆணையாளர், பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, இரத்தினபுரி, அமரர் ஜீவா சாலையின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறுவர் விளையாட்டு பூங்காவையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...