கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார்பாடி உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டன.

உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள 35 மொத்த மீன் விற்பனை கடைகள் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள 16 கடைகள் என மொத்தம் 51 கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



இந்த திடீர் சோதனையின் போது, மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் சுமார் 65 கிலோ அளவிலான கெட்டுப்போன மீன்களும், 4 சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.50,150 ஆகும்.

கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது போன்று கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் இது போன்ற குறைபாடுகளை கண்டறிந்தால், உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண் 9444042322-க்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், Google Play Store-இல் கிடைக்கும் 'tnfoodsafetyconsumer' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...