கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார்பாடி உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டன.

உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள 35 மொத்த மீன் விற்பனை கடைகள் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள 16 கடைகள் என மொத்தம் 51 கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



இந்த திடீர் சோதனையின் போது, மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் சுமார் 65 கிலோ அளவிலான கெட்டுப்போன மீன்களும், 4 சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.50,150 ஆகும்.

கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது போன்று கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் இது போன்ற குறைபாடுகளை கண்டறிந்தால், உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண் 9444042322-க்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், Google Play Store-இல் கிடைக்கும் 'tnfoodsafetyconsumer' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...