கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார்பாடி உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டன.

உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள 35 மொத்த மீன் விற்பனை கடைகள் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள 16 கடைகள் என மொத்தம் 51 கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



இந்த திடீர் சோதனையின் போது, மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் சுமார் 65 கிலோ அளவிலான கெட்டுப்போன மீன்களும், 4 சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.50,150 ஆகும்.

கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது போன்று கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் இது போன்ற குறைபாடுகளை கண்டறிந்தால், உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண் 9444042322-க்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், Google Play Store-இல் கிடைக்கும் 'tnfoodsafetyconsumer' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...