திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் திறப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உரிமம் புதுப்பித்து மீண்டும் குவாரிகளை இயக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் குவாரி இயக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினர். மறுபுறம், மொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இக்குவாரிகளை நம்பி இருப்பதால் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் இரு தரப்பு கருத்துக்களையும் பதிவு செய்து கொண்டனர். மேலும், கருத்துக்கேட்பு தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கருத்துக்கேட்பு கூட்டம் குவாரிகள் திறப்பது தொடர்பான முடிவெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...