திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் திறப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உரிமம் புதுப்பித்து மீண்டும் குவாரிகளை இயக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் குவாரி இயக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினர். மறுபுறம், மொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இக்குவாரிகளை நம்பி இருப்பதால் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் இரு தரப்பு கருத்துக்களையும் பதிவு செய்து கொண்டனர். மேலும், கருத்துக்கேட்பு தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கருத்துக்கேட்பு கூட்டம் குவாரிகள் திறப்பது தொடர்பான முடிவெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...