அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்: பதிவு பணிகள் பாதிப்பு

கோவை மாவட்டம் அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க நில கையகப்படுத்தல் எதிர்ப்பில் விவசாயிகள் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.

கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் நான்கு ஊராட்சிகளும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகளும் உள்பட மொத்தம் ஆறு ஊராட்சிகளில் 3,850 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை அமைப்பதாக 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிவித்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், கடந்த வாரம் மூன்று நாட்கள் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை பத்திரப்பதிவு துவங்கியது.



இந்நிலையில், சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (செப்டம்பர் 2) விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...