நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறை உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார். மாணார் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார்.


கோவை: நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, காரமடை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை பஞ்சாயத்தில் அமைந்துள்ள மலைக்கிராமமான மாணார் பகுதியில் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளியின் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியை செப்டம்பர் 2 ஆம் தேதி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, எம்பி ஆ.ராசா பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் ப.அருண்குமார், கூடலூர் நகரச் செயலாளர் அ.அரிவரசு, கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர் ஜெ.அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...