கோவை உப்பிலிபாளையத்தில் பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம்: இன்ஜினியர் தற்கொலை

கோவை உப்பிலிபாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்த 31 வயது இன்ஜினியர் மணிகண்டன், பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.


கோவை: கோவை உப்பிலிபாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்த இன்ஜினியர் ஒருவர், பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கருவலூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் மணிகண்டன் (31), இன்ஜினியரிங் பட்டதாரி. திருமணமாகாத மணிகண்டன், கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மணிகண்டன் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். செப்டம்பர் 1 ஆம் தேதி கோவைக்கு விரைந்து வந்த பெற்றோர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அறையைத் திறந்து பார்த்தபோது, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, கோவை ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மணிகண்டன் பங்குச்சந்தை முதலீட்டில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் உப்பிலிபாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...