உடுமலை மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மளிகைக் கடையில் இருவர் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டனர். சுமார் 8,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டன. சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் வீதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டு நடந்துள்ளது. இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில், கடை உரிமையாளர் புதிதாக வந்த சரக்குகளை சரிபார்க்க வெளியே இறக்கி வைத்திருந்தார். கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், உரிமையாளரும் பணியாளரும் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இரண்டு நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.



முதலில் ஒருவர் அருகிலுள்ள பேன்சி கடைக்குச் சென்றார். பின்னர் செல்போனில் பேசுவது போல் நடித்து மளிகைக் கடைக்கு வந்து, அங்கிருந்த பெட்டியை எடுத்து பேன்சி கடைக்கு முன் வைத்தார். பின்னர் மற்றொருவரை அழைத்தார். அவர் வந்ததும், முதல் நபர் பேன்சி கடைக்குள் சென்று கடைக்காரருடன் பேச்சுக் கொடுத்தார். இதையடுத்து இரண்டாவது நபர் பலசரக்கு பெட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

திருடப்பட்ட பெட்டியில் சுமார் 8,000 ரூபாய் மதிப்புள்ள சூடம் மற்றும் பெருங்காய டப்பாக்கள் இருந்ததாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக உடுமலை பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், இது குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரணை செய்து, திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...