பொள்ளாச்சி: இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன் மீது நடவடிக்கை கோரி சார் ஆட்சியரிடம் பெண் புகார்

பொள்ளாச்சி அருகே, அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை அபகரித்ததாக கூறப்படும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் சார் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண், தனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

பார்வதியின் கூற்றுப்படி, 1996 ஆம் ஆண்டு அரசு அவருக்கு இலவசமாக இரண்டு சென்ட் நிலம் வழங்கியது. கணவரை இழந்த நிலையில், அந்த இடத்தில் வீடு கட்ட முயன்றபோது, அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். விசாரித்தபோது, அவரது அண்ணன் முத்துசாமியும், தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த அவரது மகன் நாராயணமூர்த்தியும் போலியான ஆவணங்கள் தயாரித்து, கோமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரியவந்தது.



பார்வதி மேலும் கூறுகையில், தனது ஆதார் மற்றும் போலி கைரேகையைப் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவரது அண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல்துறை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஊராட்சி மன்ற தலைவர் நாராயணமூர்த்தி, தாங்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என மிரட்டுவதாகவும் பார்வதி தெரிவித்தார். இந்நிலையில், போலி பத்திரப்பதிவு செய்து வீட்டு மனையை அபகரித்த தனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...