பொள்ளாச்சி: இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன் மீது நடவடிக்கை கோரி சார் ஆட்சியரிடம் பெண் புகார்

பொள்ளாச்சி அருகே, அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை அபகரித்ததாக கூறப்படும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் சார் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண், தனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

பார்வதியின் கூற்றுப்படி, 1996 ஆம் ஆண்டு அரசு அவருக்கு இலவசமாக இரண்டு சென்ட் நிலம் வழங்கியது. கணவரை இழந்த நிலையில், அந்த இடத்தில் வீடு கட்ட முயன்றபோது, அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். விசாரித்தபோது, அவரது அண்ணன் முத்துசாமியும், தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த அவரது மகன் நாராயணமூர்த்தியும் போலியான ஆவணங்கள் தயாரித்து, கோமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரியவந்தது.



பார்வதி மேலும் கூறுகையில், தனது ஆதார் மற்றும் போலி கைரேகையைப் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவரது அண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல்துறை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஊராட்சி மன்ற தலைவர் நாராயணமூர்த்தி, தாங்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என மிரட்டுவதாகவும் பார்வதி தெரிவித்தார். இந்நிலையில், போலி பத்திரப்பதிவு செய்து வீட்டு மனையை அபகரித்த தனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...