பொள்ளாச்சி: இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன் மீது நடவடிக்கை கோரி சார் ஆட்சியரிடம் பெண் புகார்

பொள்ளாச்சி அருகே, அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை அபகரித்ததாக கூறப்படும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் சார் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண், தனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

பார்வதியின் கூற்றுப்படி, 1996 ஆம் ஆண்டு அரசு அவருக்கு இலவசமாக இரண்டு சென்ட் நிலம் வழங்கியது. கணவரை இழந்த நிலையில், அந்த இடத்தில் வீடு கட்ட முயன்றபோது, அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். விசாரித்தபோது, அவரது அண்ணன் முத்துசாமியும், தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த அவரது மகன் நாராயணமூர்த்தியும் போலியான ஆவணங்கள் தயாரித்து, கோமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரியவந்தது.



பார்வதி மேலும் கூறுகையில், தனது ஆதார் மற்றும் போலி கைரேகையைப் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவரது அண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல்துறை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஊராட்சி மன்ற தலைவர் நாராயணமூர்த்தி, தாங்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என மிரட்டுவதாகவும் பார்வதி தெரிவித்தார். இந்நிலையில், போலி பத்திரப்பதிவு செய்து வீட்டு மனையை அபகரித்த தனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...