மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை முட்டி வீசிய மாடு: வைரலாகும் காணொளி

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை மாடு முட்டி வீசியது. இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதி சாலைகளில் கால்நடைகள் சுதந்திரமாக உலவி வருவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை சங்கர் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மாடு முட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த இந்த சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...