பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கவலை தெரிவித்து, பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செப்டம்பர் 1 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது, மலையாள திரைப்பட உலகில் நடிகைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இது தொழில்நுட்ப யுகம். எது செய்தாலும் வெளியே தெரிந்து விடும். தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் தூய்மை பணியாளரில் இருந்து உயர் அதிகாரிகள் வரை பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடர்கிறது. இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வருகிறது?" என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும், உயர்ந்த பதவிகளில் இருந்தாலும், சில ஆண்கள் அவர்களை போகப் பொருளாகவே பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருச்சி என்.ஐ.டி.யில் படித்த மாணவிக்கு, கேபிள் வயர் பொருத்த வந்த ஒப்பந்த பணியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

மலையாள திரைப்பட உலகில் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார். "எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"எதற்கும் பயப்படாமல், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாமல் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது" என்று வானதி சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோர் யாரும் தப்பிவிடக் கூடாது என்றும், அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைதான் இனி அதுபோல வேறொருவர் செய்யாமல் தடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நிறுவனங்களும், அரசும் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...