சூலூர் அருகே பள்ளி மாணவரை கத்தியால் குத்தி கைபேசி பறித்த இருவர் கைது

சூலூர் அருகே டியூஷன் முடித்து வீடு திரும்பிய 14 வயது மாணவரை கத்தியால் குத்தி கைபேசி பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Coimbatore: சூலூர் அருகே பள்ளி மாணவர் ஒருவரை கத்தியால் குத்தி கைபேசியை பறித்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூலூர் அருகே வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் டியூஷன் முடிந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் வந்த மூன்று பேர் மாணவரை வழிமறித்து, அவரது கைபேசியை கேட்டுள்ளனர். மாணவர் மறுத்ததால், அவரை கத்தியால் குத்தி விட்டு கைபேசியை பறித்துக் கொண்டு மூவரும் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆகஸ்ட் 31 அன்று ஐயப்பன் (29) மற்றும் தமிழ்ச்செல்வன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...