என் உறவுகள் எல்லாம் கோவையில்தான் இருக்கிறார்கள் - மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். கோவைக்கும் தனக்கும் உள்ள உறவை கார்த்தி பகிர்ந்து கொண்டார்.



Coimbatore: கோவை கொடிசியா வளாகத்தில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெய்யழகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, ஸ்ரீ திவ்யா, அர்விந்த் சுவாமி, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, "கல்யாணத்திற்குப் பிறகு கோவையில் எனக்கு நடக்கும் முதல் பெரிய நிகழ்ச்சி இதுதான். இந்த ஊருக்கும் எனக்கும் எந்த மாதிரியான சொந்தம் இருக்கிறதோ, அந்த மாதிரியான விஷயத்தை மெய்யழகன் படமும் பேசும். அதனால் இந்த ஊரில் நிகழ்ச்சி நடத்தினால்தான் அர்த்தமுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.



மேலும் அவர், "எங்களின் வேர்கள், உறவுகள் எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள். அதனால்தான் படத்தின் நிகழ்ச்சியை இங்கு நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது" என்று கூறினார்.

படத்தின் மற்ற நடிகர்களும் பாடகர்களும் பேசுகையில், இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், கோவையின் கருப்பொருளைக் கொண்டு தஞ்சாவூரை சார்ந்து இப்படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், வரும் காலங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.



'மெய்யழகன்' திரைப்படத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடிக்க, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...