கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களிடமிருந்து 711 மனுக்கள் பெறப்பட்டன.



கோவை: தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் ஆகஸ்ட் 31 அன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மேற்கு மண்டல போலீசாருக்கான குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோவை மாநகரம்-மாவட்டம், திருப்பூர் மாநகரம்-மாவட்டம், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினரிடமிருந்து பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை காவல் துறை தலைவர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மொத்தம் 711 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

சங்கர் ஜிவால் பேசுகையில், ஏற்கனவே இடமாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுத்தவர்களின் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையிலும், இப்போது மனுக்கள் கொடுக்கும் போலீசாரின் மனுக்கள் சீனியாரிட்டி அடிப்படையிலும் பரிசீலிக்கப்படும் என்றார். மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன் இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த முக்கிய கூட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் சரவணக்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...