கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களிடமிருந்து 711 மனுக்கள் பெறப்பட்டன.



கோவை: தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் ஆகஸ்ட் 31 அன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மேற்கு மண்டல போலீசாருக்கான குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோவை மாநகரம்-மாவட்டம், திருப்பூர் மாநகரம்-மாவட்டம், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினரிடமிருந்து பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை காவல் துறை தலைவர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மொத்தம் 711 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

சங்கர் ஜிவால் பேசுகையில், ஏற்கனவே இடமாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுத்தவர்களின் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையிலும், இப்போது மனுக்கள் கொடுக்கும் போலீசாரின் மனுக்கள் சீனியாரிட்டி அடிப்படையிலும் பரிசீலிக்கப்படும் என்றார். மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன் இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த முக்கிய கூட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் சரவணக்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...