கோவையில் ரூ.15.81 கோடி முதலீட்டு மோசடி: நிறுவன நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவையில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி 387 முதலீட்டாளர்களிடம் ரூ.15.81 கோடி பெற்று மோசடி செய்தது. நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.15.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை, காந்திபுரம் டாடாபாத் 7-வது வீதியில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதை நம்பி ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், நிறுவனம் வாக்குறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்காமல் ஏமாற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் 2019-ஆம் ஆண்டு கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 387 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.15 கோடியே 81 லட்சத்து 35 ஆயிரம் முதலீடு பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த குறிஞ்சி என்கிற குறிஞ்சிநாதன் (42) மற்றும் நிறுவன ஊழியர்களான கதிர்வேல், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, அருணாரெமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ஆகஸ்ட் 30 அன்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற நான்கு ஊழியர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதி, விதிக்கப்பட்ட அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட 387 முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்க உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைத்ததாக கருதப்படுகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...