கோவையில் செவிலியரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை


கோவையில் செவிலியரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஒத்தகால்மண்டபம் மாசிகவுடன்பதி பகுதியைச் சேர்ந்தவர் பிராகாஷ் (28). இவரது மனைவி சத்யபாமா. பிரகாஷ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே, அதேப் பகுதியைச் சேர்ந்த செவிலியரான ஜகதாம்பாள் என்பவருடன் பிரகாஷ்-க்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி பிரகாஷை ஜகதாம்பாள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஜகதாம்பாளை பிராகாஷ் தனது நண்பர் ரூபேஷ் என்பவருடன் இணைந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு டவுன் காவல்துறையினர் பிரகாஷ், அவரது மனைவி சத்யபாமா, பிராகாஷின் நண்பர் ரூபேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று கோவை மகிளா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வழக்கில் சேர்க்கப்பட்ட பிராகாஷின் மனைவி சத்யபாமா மற்றும் நண்பர் ரூபேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். பிராகாஷுக்கு ஆயுள் தண்டனையும்,  5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...