பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ளார். பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா இன்று கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வந்திறங்கினார்.



விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் திரளாக குழுமி, ஜெ.பி.நட்டாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பாஜக கொடிகளை ஏந்தியவாறு, முழக்கங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்.



ஜெ.பி.நட்டாவுடன், பாஜக மூத்த தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை சௌந்தராஜன், பேராசிரியர் கனகசபாபதி, ஏ பி முருகானந்தம் ஆகியோரும் விமானத்தில் வந்திறங்கினர்.



விமான நிலையத்திலிருந்து ஜெ.பி.நட்டா சாலை மார்க்கமாக பாலக்காடு நோக்கி புறப்பட்டார். அவர் இன்று இரவு பாலக்காட்டில் தங்க உள்ளதாகவும், நாளை நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசியக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...