பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ளார். பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா இன்று கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வந்திறங்கினார்.



விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் திரளாக குழுமி, ஜெ.பி.நட்டாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பாஜக கொடிகளை ஏந்தியவாறு, முழக்கங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்.



ஜெ.பி.நட்டாவுடன், பாஜக மூத்த தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை சௌந்தராஜன், பேராசிரியர் கனகசபாபதி, ஏ பி முருகானந்தம் ஆகியோரும் விமானத்தில் வந்திறங்கினர்.



விமான நிலையத்திலிருந்து ஜெ.பி.நட்டா சாலை மார்க்கமாக பாலக்காடு நோக்கி புறப்பட்டார். அவர் இன்று இரவு பாலக்காட்டில் தங்க உள்ளதாகவும், நாளை நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசியக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...