பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ளார். பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா இன்று கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வந்திறங்கினார்.



விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் திரளாக குழுமி, ஜெ.பி.நட்டாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பாஜக கொடிகளை ஏந்தியவாறு, முழக்கங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்.



ஜெ.பி.நட்டாவுடன், பாஜக மூத்த தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை சௌந்தராஜன், பேராசிரியர் கனகசபாபதி, ஏ பி முருகானந்தம் ஆகியோரும் விமானத்தில் வந்திறங்கினர்.



விமான நிலையத்திலிருந்து ஜெ.பி.நட்டா சாலை மார்க்கமாக பாலக்காடு நோக்கி புறப்பட்டார். அவர் இன்று இரவு பாலக்காட்டில் தங்க உள்ளதாகவும், நாளை நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசியக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...