பொள்ளாச்சி: பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து பெரிய ரத்ததான முகாமை நடத்தினர். 200 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கியுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய ரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் ரெட் கிராஸ் மற்றும் NSS மாணவர்கள் இந்த முகாமில் ரத்த தானம் வழங்கினர். பொள்ளாச்சி ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, செவிலியர்கள் அன்னக்கொடி, அனுராதா, திலகமணி மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, ஆய்வக நிபுணர் மகாலட்சுமி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் கலந்து கொண்டனர்.



இவர்களுடன் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களும், திருச்சியிலிருந்து வந்த செவிலியர் கல்லூரி மாணவிகளும் இந்த முகாமில் பங்கேற்றனர். இந்த முகாமில் 200 மாணவர்கள் மற்றும் கல்லூரியில் உள்ள பயிற்சி ஆளர்கள் ரத்ததானம் செய்தனர்.

முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் நோயாளிகள், அறுவை சிகிச்சை நோயாளிகள், விபத்து சிகிச்சை நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...