பொள்ளாச்சி: பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து பெரிய ரத்ததான முகாமை நடத்தினர். 200 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கியுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய ரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் ரெட் கிராஸ் மற்றும் NSS மாணவர்கள் இந்த முகாமில் ரத்த தானம் வழங்கினர். பொள்ளாச்சி ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, செவிலியர்கள் அன்னக்கொடி, அனுராதா, திலகமணி மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, ஆய்வக நிபுணர் மகாலட்சுமி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் கலந்து கொண்டனர்.



இவர்களுடன் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களும், திருச்சியிலிருந்து வந்த செவிலியர் கல்லூரி மாணவிகளும் இந்த முகாமில் பங்கேற்றனர். இந்த முகாமில் 200 மாணவர்கள் மற்றும் கல்லூரியில் உள்ள பயிற்சி ஆளர்கள் ரத்ததானம் செய்தனர்.

முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் நோயாளிகள், அறுவை சிகிச்சை நோயாளிகள், விபத்து சிகிச்சை நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...