மடத்துக்குளம் அருகே கணியூரில் தேனீக்கள் தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் திடீர் தேனீக்கள் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பேருந்து நிலையம் பகுதியில் திடீரென பறந்து வந்த தேனீக்கள் கூட்டம் அங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பள்ளிகள் முடிந்து மாணவ மாணவிகள் வீட்டுக்கு திரும்பும் வேளையில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மாணவர்களையும் தேனீக்கள் துரத்தி கொட்டியதால், குழந்தைகள் என்ன செய்வதென்று தெரியாமல் சாலைகளின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடினர்.

அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் தேனீக்கள் விடாமல் கொட்டியது.



ஒரு முதியவரை தேனீக்கள் தேடித்தேடி கொட்டியதாகவும், அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற செல்ல முடியாத அளவிற்கு தேனீக்கள் சூழ்ந்ததாகவும் தெரிகிறது.

காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...