மடத்துக்குளம் அருகே கணியூரில் தேனீக்கள் தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் திடீர் தேனீக்கள் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பேருந்து நிலையம் பகுதியில் திடீரென பறந்து வந்த தேனீக்கள் கூட்டம் அங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பள்ளிகள் முடிந்து மாணவ மாணவிகள் வீட்டுக்கு திரும்பும் வேளையில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மாணவர்களையும் தேனீக்கள் துரத்தி கொட்டியதால், குழந்தைகள் என்ன செய்வதென்று தெரியாமல் சாலைகளின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடினர்.

அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் தேனீக்கள் விடாமல் கொட்டியது.



ஒரு முதியவரை தேனீக்கள் தேடித்தேடி கொட்டியதாகவும், அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற செல்ல முடியாத அளவிற்கு தேனீக்கள் சூழ்ந்ததாகவும் தெரிகிறது.

காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...