மடத்துக்குளம் அருகே கணியூரில் தேனீக்கள் தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் திடீர் தேனீக்கள் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பேருந்து நிலையம் பகுதியில் திடீரென பறந்து வந்த தேனீக்கள் கூட்டம் அங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பள்ளிகள் முடிந்து மாணவ மாணவிகள் வீட்டுக்கு திரும்பும் வேளையில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மாணவர்களையும் தேனீக்கள் துரத்தி கொட்டியதால், குழந்தைகள் என்ன செய்வதென்று தெரியாமல் சாலைகளின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடினர்.

அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் தேனீக்கள் விடாமல் கொட்டியது.



ஒரு முதியவரை தேனீக்கள் தேடித்தேடி கொட்டியதாகவும், அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற செல்ல முடியாத அளவிற்கு தேனீக்கள் சூழ்ந்ததாகவும் தெரிகிறது.

காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...