உடுமலை அருகே ஆலம்பாளையம் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மூன்று ஆண்டுகளாக வறண்டுள்ள குளத்தால் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பளவில் பூசாரி நாயக்கன் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் 10 அடி நீர்மட்டமும், 24.67 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டுள்ளது. சுற்றுப்புறத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் போர்வெல்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் இந்த குளம் உள்ளது.

நேரடியாக 88.56 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மானுப்பட்டி கிளை கால்வாயில் உள்ள 2.65 மடை வாயிலாக குளத்துக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது.



ஆனால், கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் குளறுபடி காரணமாக குளத்துக்கு நீர் வழங்கப்படவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக குளம் வறண்டு காணப்படுவதோடு, சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு, தென்னை உள்ளிட்ட நிலைப் பயிர்களும் காய்ந்து வருகின்றன.

தற்போது, பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையின் தற்போதைய நீர்மட்டம் மொத்த 60 அடியில் 53.75 அடியாக உள்ளது. இந்நிலையில், பாரம்பரிய உரிமை அடிப்படையில் ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாய்க்கன் குளத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...