உடுமலை அருகே ஆலம்பாளையம் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மூன்று ஆண்டுகளாக வறண்டுள்ள குளத்தால் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பளவில் பூசாரி நாயக்கன் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் 10 அடி நீர்மட்டமும், 24.67 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டுள்ளது. சுற்றுப்புறத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் போர்வெல்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் இந்த குளம் உள்ளது.

நேரடியாக 88.56 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மானுப்பட்டி கிளை கால்வாயில் உள்ள 2.65 மடை வாயிலாக குளத்துக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது.



ஆனால், கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் குளறுபடி காரணமாக குளத்துக்கு நீர் வழங்கப்படவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக குளம் வறண்டு காணப்படுவதோடு, சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு, தென்னை உள்ளிட்ட நிலைப் பயிர்களும் காய்ந்து வருகின்றன.

தற்போது, பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையின் தற்போதைய நீர்மட்டம் மொத்த 60 அடியில் 53.75 அடியாக உள்ளது. இந்நிலையில், பாரம்பரிய உரிமை அடிப்படையில் ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாய்க்கன் குளத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...