கோவையில் வறுமையால் பெண் குழந்தையை விற்ற தாய் உள்பட மூவர் கைது

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வறுமையின் காரணமாக பெண் குழந்தையை விற்ற தாய், இடைத்தரகர் மற்றும் வாங்கியவர் என மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்த 25 வயதான ஆதிகணேஷ் மற்றும் அவரது 22 வயதான மனைவி நந்தினி ஆகியோர் வறுமையின் காரணமாக தங்களது பெண் குழந்தையை விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை, குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக விற்க முடிவு செய்தனர். இதற்காக கஸ்தூரி பாளையம், சத்யா நகரைச் சேர்ந்த 42 வயதான இடைத்தரகர் தேவிகா என்பவர் உதவியுடன், கூடலூர் கவுண்டம்பாளையம் மாந்தோப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் - அனிதா தம்பதியிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை விற்ற தாய் நந்தினி, இடைத்தரகர் தேவிகா மற்றும் குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், பெண் குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

தொடர்ந்து, இதுபோன்று தேவிகா வேறு யாரிடமாவது குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...