வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளித்தார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வால்பாறை பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வருகை புரிந்தார்.



வால்பாறையில் உள்ள அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், பகுதி வழியாக வால்பாறை, கருமலை, பச்சமலை, அக்காமலை, மூவிஸ், சோலையார், பண்ணி மேடு சைக்கிள் முடி, போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேல் திமுகவிற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ளதாகவும், வால்பாறை மேல் தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேல் வாக்கு அளித்ததாகவும் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.

வால்பாறை பகுதியில் உள்ள பிரச்சினைகள், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, மாற்று தொழில் மற்றும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்தார்.

வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர், மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...