கோவை வடக்கு தொகுதியில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் சாயிபாபா காலனி மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகளில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25, 2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் சாயிபாபா காலனி பகுதி மற்றும் மணியகாரன்பாளையம் பகுதி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, கடந்த ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.



சாயிபாபா காலனி பகுதியில் உள்ள நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டபத்தில் காலை 12 மணிக்கு 18வது வட்டக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள கணபதி மாநகர் பிளாக் -1 இல் 20வது வட்டக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.



இரு கூட்டங்களிலும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



இக்கூட்டத்தில், சாயிபாபா காலனி பகுதி செயலாளர் கே.எம்.ரவி, 18 வது வட்டக் கழகச் செயலாளர் ஜெயச்சந்திரன், பகுதி அவைத் தலைவர் சுக்ருல்லா பாபு, வைரமுருகன் mc., வட்டக் கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் கழக அணிகளின்நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், BLA2, பூத்கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், 18 வது வார்டு பொது உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மணியகாரன்பாளையம் பகுதி செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன், 20 வது வட்டக் கழகச் செயலாளர் இரா.புகழேந்தி , மாமன்ற உறுப்பினர் மரியராஜ் MC., மாநகர் மாவட்ட மகளிரணி தலைவர் சி.வி.தீபா, பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் கழகஅணிகளின்நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், BLA2, பூத்கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், 20 வது வார்டு பொது உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...