கோவை வடக்கு தொகுதியில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் சாயிபாபா காலனி மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகளில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25, 2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் சாயிபாபா காலனி பகுதி மற்றும் மணியகாரன்பாளையம் பகுதி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, கடந்த ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.



சாயிபாபா காலனி பகுதியில் உள்ள நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டபத்தில் காலை 12 மணிக்கு 18வது வட்டக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள கணபதி மாநகர் பிளாக் -1 இல் 20வது வட்டக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.



இரு கூட்டங்களிலும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



இக்கூட்டத்தில், சாயிபாபா காலனி பகுதி செயலாளர் கே.எம்.ரவி, 18 வது வட்டக் கழகச் செயலாளர் ஜெயச்சந்திரன், பகுதி அவைத் தலைவர் சுக்ருல்லா பாபு, வைரமுருகன் mc., வட்டக் கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் கழக அணிகளின்நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், BLA2, பூத்கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், 18 வது வார்டு பொது உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மணியகாரன்பாளையம் பகுதி செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன், 20 வது வட்டக் கழகச் செயலாளர் இரா.புகழேந்தி , மாமன்ற உறுப்பினர் மரியராஜ் MC., மாநகர் மாவட்ட மகளிரணி தலைவர் சி.வி.தீபா, பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் கழகஅணிகளின்நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், BLA2, பூத்கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், 20 வது வார்டு பொது உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...