கோவை வடக்கு தொகுதியில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் சாயிபாபா காலனி மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகளில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25, 2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் சாயிபாபா காலனி பகுதி மற்றும் மணியகாரன்பாளையம் பகுதி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, கடந்த ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.



சாயிபாபா காலனி பகுதியில் உள்ள நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டபத்தில் காலை 12 மணிக்கு 18வது வட்டக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள கணபதி மாநகர் பிளாக் -1 இல் 20வது வட்டக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.



இரு கூட்டங்களிலும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



இக்கூட்டத்தில், சாயிபாபா காலனி பகுதி செயலாளர் கே.எம்.ரவி, 18 வது வட்டக் கழகச் செயலாளர் ஜெயச்சந்திரன், பகுதி அவைத் தலைவர் சுக்ருல்லா பாபு, வைரமுருகன் mc., வட்டக் கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் கழக அணிகளின்நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், BLA2, பூத்கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், 18 வது வார்டு பொது உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மணியகாரன்பாளையம் பகுதி செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன், 20 வது வட்டக் கழகச் செயலாளர் இரா.புகழேந்தி , மாமன்ற உறுப்பினர் மரியராஜ் MC., மாநகர் மாவட்ட மகளிரணி தலைவர் சி.வி.தீபா, பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் கழகஅணிகளின்நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், BLA2, பூத்கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், 20 வது வார்டு பொது உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...